Pages

Saturday, April 16, 2011

2010 MEGAMALA , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் 20-10-2010

20-10-2010

பத்மனாபபுரம் அரண்மணை, மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் திற்பரப்பு அருவி - இரவு அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கல்லிடைகுறிச்சியில் தங்குதல்.
எங்களுக்கு தங்குவதற்க்கு மூன்றாவது மாடியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. சூரிய உதயத்தை நன்கு பார்த்து ரசிக்க வசதியாக வங்காள விரிகுடாவை நோக்கி கிழக்குமுகமாக அறை அமைந்துருந்தது. காலை 5.30 மணிக்கு தொலைபேசி மூலமாக ஹோட்டல் வரவேர்பாளர் எங்களை சூரியயுதயம் காண எழுப்பினார். நானும் சுகுமாரும் அறையிலிருந்தே சூரியயுதயத்தை கண்டோம். குமாரவேலும், பாலகிருஷ்ணனும் மாடியிலிருந்து உதயத்தை ரசித்தனர்.

காலை டிபனை முடித்து அறையை காலிசெய்துவிட்டு கிளம்பினோம். சுசீந்தரம் ஸ்தாணு மலையன் கோயில் கன்யாகுமரியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டரில் நாகர்கோயில் போகும் வழியிலுள்ளது. குமாரவேல் மட்டும் கோயிலுக்கு சென்றுவந்தார். பின்பு பதமானாபபுரம் அரண்மணையை நோக்கி பயணித்தோம். பதமனாபபுரம்அரண்மணைக்கு நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் தக்கலை எம்ஜியார் சிலையருகில் வலதுபுரம் திரும்பவேண்டும். இந்த அரண்மணை சுமார் 460 வருடங்கள் பழமையானது. 16-ஆம் நூற்றாண்டில் அரசாண்ட மார்ததண்ட மன்னர்கள் வசித்த இடமாகும். முழுவதும் தேக்கு மரத்தில் பூவேலைசெய்துள்ளனர். ஒவ்வொரு சித்திரமும் கதை சொல்கிறது. 6.5 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள அரண்மணையின் சிறப்பை விளக்கிக்கூறுவதற்க்கு ஆங்காங்கே பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு எல்லைக்குள் இவ்விடம் அமைந்திருந்தாலும் இந்த அரண்மணை இருக்கும் இடமும் இதன் பராமரிப்பும் கேரள அரசிடம் உள்ளது. திங்கட்கிழமை மட்டும் அரண்மணைக்கு விடுமுறை. காலை 9.00-மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரையிலும் மற்றும் மதியம் 2.00 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரையிலும் அரண்மணையை பார்வையிட அனுமதிக்கிறார்கள்.


இது மிகப் பழமையான கேரளத்து ஓட்டு வீடு பாணியில் இருக்கிறது. அதன் பழமையை அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். அந்த அரண்மணையினுள் சென்றால், வெளியே வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. விருந்தாளிகள் அறை, நவராத்திரி மண்டபம், சமையல் அறை, சாப்பாட்டு அறை, மகாராணியின் ஒப்பனை அறை, அந்தபுரம் என்று ஏகப்பட்ட அறைகள். ஒவ்வொரு அறையிலும் ஒரு ஊழியரும் நின்று நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். சுற்றுலாத் துறை இங்கே தன் வேலையை நன்றாகச் செய்திருக்கிறது. நுனுக்கமான மர வேலைப்பாடுகள் கண்ணைக் கவருகின்றன. ஒரே பலா மரத்தில் செய்யப்பட்ட அழகான தூண், 64 மூலிகை மரங்களினால் செய்யப்பட்ட கட்டில், இன்றும் சரியான நேரம் காட்டிக்கொண்டிருக்கும் 300 வருட பழமையான கடிகாரம், மிக அரிய ஓவியங்கள் என்று இந்த அரண்மணையில் சுவாரசியமான விசயங்கள் நிறைய இருக்கின்றன. மர வேலைப்பாடுகள், வித விதமான விளக்குகள் என்று கேரளாவின் பாரம்பரியம் மொத்தமும் இங்கே கொட்டிக்கிடக்கின்றது.காலை 9 மணிக்குத் திறக்கிறார்கள். அப்போதே சென்று பார்த்துவிடுங்கள். உச்சி வெயில் நேரத்தில் சென்றீர்கள் என்றால் சிரமப்படுவீர்கள்.

மதிய உணவுக்கு அங்கிருந்த ஒரளவு சுமாரான ஹோட்டலில் உணவுப்பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து சுமார் பதினான்கு கிலோமீட்டரிலுள்ள மாத்தூர் தொட்டிப்பாலதுக்குச் சென்றோம். இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இப்படி மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது. கணியான் என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது.தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.



இந்த அருவி குலசேகரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் கோதையாறு தான் இங்கு அருவியாக கொட்டுகிறது. கோயிலை ஒட்டிச் செல்லும் பாதையில் சென்றால் சிறிய அணைக்கட்டு உள்ளது. கோதையாறு இவ்விடத்தில் தேக்கிவைக்கப்படுகிறது. இவ்விடத்தில் படகு சவாரியும் செல்லலாம். இவ்விடத்திலிருந்து பாறைகளின் வழியே பயணிக்கும் ஆறு பாறையிலிருந்து 50 அடி உயரத்திலிருந்து அருவியாய் குதிக்கிறது. இதுவே திற்பரப்பு அருவியாகும். பாலகிருஷ்ணனும், குமாரவேலுவும் அருவியில் குளித்து புத்துணர்ச்சி பெற்றார்கள். நானும் சுகுமாரும் அவர்களைப்பார்த்து புத்துணர்ச்சி பெற்றொம்.


குலசேகரம் தக்கலை வழியாக நாகர்கோயிலுக்கு வரும் வழியில் நாகர்கோயிலுக்கு சுமார் 5 கிலோமீட்டரில் திருநெல்வேலி செல்ல பாதை பிரிகிறது. ஆரல்வாய்மொழி தாண்டியதும் காவல்கிணறில் எண்எச்7 பைபாஸில் பயணம் தொடர்ந்திடவேண்டும். பின்பு நாங்குநேரிக்கு செல்லும் வழியில் திரும்பி இடது பக்கத்தில் பிரியும் களக்காடு,திருகுறுங்குடி மற்றும் சேரன்மாதேவி வழியாக அம்பாசமுத்திரத்திற்க்கு செல்லும் சாலையில் அம்பாசமுத்திரத்திற்க்கு 2 கிலோமீட்டரிலுள்ள கல்லிடைக்குறிச்சியை அடைந்தபோது இரவு மணி 7.00. ஹோட்டல் பாஸ்கர் லாட்ஜில் அறைகள் முன்பதிவு செய்திருந்தோம். கோயிலுக்கு அருகிலுள்ள சிறிய உணவகத்தில் இரவு உணவாக இட்லிகளை வாங்கிகொண்டு அறைக்குத் திரும்பினோம்.


குலசேகரம் தக்கலை வழியாக நாகர்கோயிலுக்கு வரும் வழியில் நாகர்கோயிலுக்கு சுமார் 5 கிலோமீட்டரில் திருநெல்வேலிக்கு பாதை பிரிகிறது. ஆரல்வாய்மொழி தாண்டியதும் காவல்கிணறில் எண்எச்7 பைபாஸில் பயணம் தொடர்ந்திடவேண்டும். பின்பு நாங்குநேரிக்கு செல்லும் வழியில் திரும்பி இடது பக்கத்தில் பிரியும் களக்காடு,திருகுறுங்குடி மற்றும் சேரன்மாதேவி வழியாக அம்பாசமுத்திரத்திற்க்கு செல்லும் சாலையில் அம்பாசமுத்திரத்திற்க்கு 2 கிலோமீட்டரிலுள்ள கல்லிடைக்குறிச்சியை அடைந்தபோது இரவு மணி 7.00. ஹோட்டல் பாஸ்கர் லாட்ஜில் அறைகள் முன்பதிவு செய்திருந்தோம். கோயிலுக்கு அருகிலுள்ள சிறிய உணவகத்தில் இரவு உணவாக இட்லிகளை வாங்கிகொண்டு அறைக்குத் திரும்பினோம்.