Pages

Tuesday, December 20, 2011

கோடையிலே யொருநாள் குளிர்ந்திட வேண்டி

கோடையிலே யொருநாள் குளிர்ந்திட வேண்டி
கோடைக்குச் சென்றேன் குறிஞ்சிமலர்த் தேடி
வாடையது வீசிவரும் மலைப்பெண்ணின் பூமடியில்
பாடலொன்று பாட படுத்திருந்தேன் பாவையே


குளிர்வெண் ணிலவில் குளித்துவந்த தென்றல்
தளிர்கொடிகள் தொட்டு தழுவியே தாலாட்டி
களித்திருந்த காளையென் கன்னந் தடவி
சிலிர்த்திட செய்தே செனறு விரைந்த தெங்கோ

நீராடும் ஏரியிலே நின்றாடும் மீன்போல