Pages

Sunday, April 17, 2011

2010 MEGAMALAI , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் 19-10-2010

19-10-2010

குற்றாலத்திலிருந்து புறப்படுதல்.பெரிய அருவியில் குளித்துவிட்டு, பழைய அருவிக்கு சென்றுவிட்டு, அம்பாசமுத்திரத்தில் வனத்துறை இயக்குனர் அலுவலத்தில் மாஞ்சோலை குதிரைவெட்டியிலுள்ள வனத்துறை விருந்தினர் மாளிகையில் 21-10-2010 தங்குவதற்க்கு அனுமதி கடிதம் பெற்றுக் கொண்டு கன்னியாகுமரிக்கு மாலைக்குள் சென்று அன்றிரவு அங்கே தங்கிடதிட்டமிட்டிருந்தோம்.

காலை 6.30 க்கு பெரிய அருவிக்கு சென்றோம். பாலகிருஷ்ணணும் குமாரவேலும் சுமார் 1-1/2 மணிநேரம் குளித்தனர். சுகுமாரும் நானும் துணிகளுக்கு காவலிருந்தோம். துணிமூட்டையை உணவு பொட்டலம் என்று நினைத்த குரங்கொன்று அதையெடுக்க பாய்ந்து வந்தது. அதை தடுக்க முயற்சித்தபோது சுகுமாரின் கையில் கீறிவிட்டது.நல்லவேலை சிறிய காயத்துடன் தப்பினான். குற்றாலத்தில் குரங்குகள் தொந்தரவு மிகவும் அதிகம். மிகவும் கவனமுடன் இருக்கவும்.

பின்பு பழைய குற்றால அருவிக்கு சென்றோம். குற்றாலத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. குற்றாலத்திலிருந்து 4வது கிலோமீட்டரில் அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் வலதுபுரம் பிரிந்து செல்லும் கிளைச்சாலையில் 3 கிலோமீட்டர் சென்றால் இந்த அருவியை அடையலாம். மிகவும் அமைதியான குளியலுக்கு ஏற்றவிடம்.போகும் வழியிலெல்லாம் பண்ணைவீடுகள் உள்ளன.

இங்கிருந்து கிளம்பி பொட்டல்புதூர் மற்றும் ஆழ்வர்குறிச்சி வழியாகசுமார் 35 கிலோமீட்டரிலுள்ள அம்பாசமுத்திரத்தை காலை 10.30 மணிக்கு அடைந்தோம். அம்பாசமுத்திரம் முக்கூடல் சாலையில் பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் எதிரிலுள்ள வனச்சரகர் இயக்குனர் அலுவலத்தில் குதிரைவெட்டி விருந்தினர் மாளிகையில் 21-10-2010 தங்குவதற்க்கு கடிதம் பெற்றுக்கொன்டோம். ஒருநாள் தங்க ஒரு றைக்கு ரூ.750 ஆகிறது. கடிதத்தை அம்பாசமுத்திரம் நீதிமன்றம் அருகிலுள்ள வனச்சரகர் அலுவலத்திலுள்ள ரேஞ்சரிடம் காட்டி பணம் கட்டி ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். என்று அனுமதியுள்ளதோ அன்றுதான் பணம் கட்ட முடியும் ரேஞ்சர் திரு.ஆறுமுகம் கறாராக சொல்லிவிட்டதால் வேறுவழியின்றி அருகிலுள்ள அம்பையிலுள்ள ஓரே நல்ல சைவ ஹோட்டல் கெளரிசங்கரில் <தங்கும் வசதியுடன்>  மதிய உணவருந்திவிட்டு சேரன்மாதேவி,களக்காடு,பனகுடி வழியாக 80 கிலோமீட்டரிலுள்ள கன்னியாகுமரியை சுமார் 1.30 மணிக்கு அடைந்தோம்.

கன்னியாகுமரியில் ஹோட்டல் திரிவேணியில் இணயத்தின் மூலமாக முன்பதிவு செய்திருந்தோம். காரை ஹோட்டல் பார்க்கிங்கிலேயே நிறுத்திவிட்டு விவேகானந்தர் பாறைக்குச் செல்ல படகுத்துறைக்குச் சென்றோம். முதலில் விவேகானந்தர் பாறைக்கு படகில் சென்றோம். பாறையை சுற்றிவந்து தியான மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கிருந்து  திருவள்ளூர்சிலை அமைக்கப்பட்டுள்ள பாறைக்கு படகில் கிளம்பினோம். சூரிய அஸ்மனத்தை அங்கேயே இரசித்துவிட்டு மாலை 6.30 மணிக்கு வந்த கடைசி படகில் கரைக்கு திரும்பினோம்.

கடற்கரை அருகிலுள்ள பகவதியம்மன் கோயில் மற்றும் சுனாமி நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ள பூங்காவைப் பார்த்துவிட்டு இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.